Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரண்டை சத்துமாவு

மே 06, 2022 04:57

பிரண்டை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் நன்கு பசி எடுக்கும்.

தேவையான பொருட்கள்
பிரண்டைத் தண்டுகள் – 1 கட்டு
புளித்த மோர் - ஒரு லிட்டர்
கோதுமை - ஒரு கிலோ
கறுப்பு எள் – 100 கிராம்
கறுப்பு உளுந்து - 100 கிராம்.


செய்முறை
பிரண்டையின் மேல் உள்ள நார் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
பின் பிரண்டையை ஒரு லிட்டர் புளித்த மோரில் இரண்டு நாட்கள் ஊற வைக்கவும்.
பின் அந்தப் பிரண்டைகளை வெளியே எடுத்து நன்றாகக் காய வைத்து, அதனுடன் மேலே சொன்ன பொருட்களையும் சேர்த்து மிதமாக வறுத்தெடுக்கவும்.
அனைத்தையும் ஒன்றாக கலந்து மாவாக அரைத்துக் கொள்ளவும்.
இந்த சத்துமாவை நாம் சாப்பிடுவதன் மூலம் வாய்வு தொல்லை,கை கால் வலி போன்றவைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

தலைப்புச்செய்திகள்